3 மாநிலங்களில் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் இன்னும் 2,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜனவரி 11 :

இன்று பிற்பகல் நிலவரப்படி, மொத்தம் 2,327 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மலாக்கா, பகாங் மற்றும் ஜோகூரில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) இன்னும் தங்கியுள்ளனர்.

மலாக்கா மாநிலத்தின் மாலை 4 மணியளவில், ஜாசினில் உள்ள 3 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 112 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இன்று காலை 8 மணியளவில், இந்த எண்ணிக்கை 36 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேராக இருந்தது என்று மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் மலாக்கா மாநில இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் (PA) குத்பர்ட் ஜான் மார்ட்டின் குவாட்ரா தெரிவித்தார்.

பகாங்கில், இன்று காலை 66 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று பிற்பகலிலுடன் ஒப்பிடும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆகக் குறைந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் பகாங்கின் பெக்கானில் உள்ள செக்கோலா கேபாங்சான் டாமாயில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

ஜோகூரில், இன்று காலை 2,298 பேராக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இன்று மாலை 4 மணி நிலவரப்படி 2,154 ஆகக் குறைந்துள்ளது.

ஜோகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் கூறுகையில், இன்னும் 35 வெள்ள நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் மூவாரில் அதிகபட்சமாக 772 பேரும், அதைத் தொடர்ந்து செகாமாட்டில் 746 பேரும், தங்காக்கில் 555 பேரும், பத்து பகாட்டில் 81 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் வெயிலுடன் கூடிய வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here