5 – 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு MySejahtera மூலமான முன்பதிவுகள் ஜனவரி 31 முதல் ஆரம்பம்

கோலாலம்பூர், ஜனவரி 20 :

5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிப்ரவரி 3 முதல் இங்குள்ள துங்கு அசிசா மருத்துவமனையில் கோவிட் -19 தடுப்பூசி போட சுகாதார அமைச்சகம் தொடங்குகிறது.

அதன் அமைச்சர் கைரி ஜமாலுடின் இதுபற்றிக் கூறுகையில், MySejahtera மூலம் நியமன முன்பதிவுகள் ஜனவரி இறுதிக்குள் திறக்கப்படும் என்றும், பெற்றோர்கள் தங்கள் MySejahtera விண்ணப்பத்தில் தங்களுடைய குழந்தைகளை சார்ந்தவர்களாக பதிவு செய்ய முடியும் என்றும் கூறினார்.

“5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெற்றோர்கள் தொடங்கி, ஜனவரி 31 முதல் கட்டம் கட்டமாக செய்யப்படும்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “முன்பதிவு முறைக்கான அணுகல் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.

5 மற்றும் 12 வயதுக்குட்பட்ட 70 சதவீத குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை பிப்ரவரி தொடக்கத்தில் தொடங்கி இரண்டு மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது.

இது செயல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் முழுமையான அளவைப் பெறும் அதாவது 80 சதவீதத்தை அடையும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

“தடுப்பூசி போடுவதற்காக தங்கள் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களுக்கு முதலாளிகள் பதிவு செய்யப்படாத விடுப்பு வழங்குமாறும், தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணிக்குமாறும் நான் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவை ஆய்வு செய்துள்ளதாகவும், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Cominarty 10mcg Concentrate for Dispersion (Pfizer-BioNTech) தடுப்பூசிக்கு ஜனவரி 6 ஆம் தேதி நிபந்தனை ஒப்புதல் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் கைரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here