நீர் குழாய் உடைந்ததில் கிள்ளான், பெட்டாலிங்கில் உள்ள 142 பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிப்பு

சிலாங்கூர், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் மொத்தம் 142 பகுதிகள், ஷா ஆலம் பிரிவு 15 இல் குழாய் உடைந்ததில் திட்டமிடப்படாத  நீர் விநியோகத் தடையை எதிர்கொள்கின்றன.

இன்று பிற்பகல் 3 மணிக்கு குழாயில் அவசர பழுதுபார்க்கும் பணி தொடங்கும் என ஆயர் சிலாங்கூர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் மற்றும் கிள்ளான் பிராந்தியங்களில் உள்ள 142 பகுதிகளில் இந்த பழுதுபார்க்கும் பணி திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையை ஏற்படுத்தும் என்று அது கூறியது.

நாளை அதிகாலை 3 மணிக்கு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, அதன் பிறகு படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான இடங்களுக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் திரட்டப்படும்.

ஃபெடரல் நெடுஞ்சாலைக்கு அருகில் மூன்றாம் தரப்பினரின் சாலை மேம்பாட்டுப் பணியின் விளைவாக குழாய் வெடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here