உச்சத்தை தொட்டு வரும் கோவிட் தொற்று – இன்று 5,439 பேருக்கு தொற்று உறுதி

சுகாதார அமைச்சகம் இன்று 5,439 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,850,408 ஆக உள்ளது. இது டிசம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு 49 நாட்களில் அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

தேசிய அளவில், உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏழு நாட்களில் 23.3% அதிகரித்துள்ளது.

மலாக்காவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனை படுக்கை பயன்பாடு 80% குறைவாகவே உள்ளது. புதிய தொற்றுகளின் மாநில விவரம் நள்ளிரவுக்குப் பிறகு மட்டுமே வெளியிடப்படும். 4,744 புதிய தொற்றுகள் பதிவான நேற்றைய (ஜனவரி 26) புள்ளிவிவரங்கள் இவை:

சிலாங்கூர் (1,318), ஜோகூர் (700), கெடா (455), கோலாலம்பூர் (390),கிளந்தான்  (357), சபா (335), நெகிரி செம்பிலான் (311), பகாங் (256), பினாங்கு (183), மலாக்கா (153), பேராக் (148), தெரெங்கானு (69), புத்ராஜெயா (38) பெர்லிஸ் (17), சரவாக் (13), லாபுவான் (1).

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூரில் கடந்த வாரத்தில் புதிய தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 101 நாட்களில் அதிகபட்சமாக நேற்று ஜோகூரில் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here