14 வயது சிறுமி 10ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்

ரவாங், தாமான் துன் தேஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10ஆவது மாடியில் இருந்து இன்று தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், இன்று பிற்பகல் 3.17 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) இரண்டு வாகனங்களுடன் மொத்தம் எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடத்திற்கு வந்தபோது, ​​இறந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுமியின் உடலைக் கண்டோம் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here