அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) கொள்கையை அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் (KSN) டான்ஸ்ரீ முகமட் ஸுகி அலி கூறினார். ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக தினசரி 20,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தொடர்ந்து அதிகரிப்பைத் தொடர்ந்து இத்தகவல் வெளிவந்துள்ளது.
முகமட் ஸுகியின் கூற்றுப்படி, நாடு முழுவதும் 1.4 மில்லியன் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விஷயம், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும். இது பற்றி (WFH) என்னால் மேலும் எதுவும் கூற முடியாது. ஆனால் அது முழுமையாக ஆராயப்பட வேண்டும் மற்றும் அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். நாங்கள் (ஒருமுறை முடிவு செய்தவுடன்) தெரிவிப்போம்.
இருப்பினும், எங்களுக்கு (அரசு ஊழியர்கள்) மிக முக்கியமான விஷயம், கோவிட்-19 நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிப்பதும், அதிகாரிகள் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றுவதும் ஆகும்.