சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 21,315 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 21,072 தொற்றுகளில் இருந்து சற்று அதிகரித்துள்ளது.
புதிய நோய்த்தொற்றுகளில், 87 (அல்லது மொத்தத்தில் 0.41%) மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 இல் உள்ள நோயாளிகள், இதற்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று 17 கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய தொற்றுகளில் 21,234 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 20,551 மலேசியர்கள் மற்றும் 683 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இன்று 81 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன.
நோய்த்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை இப்போது 3,061,550 தொற்றுகளாக உள்ளது. 8,517 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860,954 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.
மருத்துவமனையில் உள்ளவர்களில் 199 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 94 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 115 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 47 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் மீதமுள்ள 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டின் கோவிட்-19 நோய்த்தொற்று விகிதம் (R-nought, அல்லது R0) 1.43 ஆக உள்ளது. லாபுவானில் அதிகபட்ச R0 அளவு 1.90 உள்ளது. அதைத் தொடர்ந்து சரவாக் (1.61), சபா (1.60), பினாங்கு (1.44), பெர்லிஸ் (1.43) , பகாங் (1.39), சிலாங்கூர் (1.37), ஜோகூர் (1.35), கிளந்தான் (1.35), கெடா (1.35), தெரெங்கானு (1.34), நெகிரி செம்பிலான் (1.34), புத்ராஜெயா (1.30), பேராக் (1.27), கோலாலம்பூர் ( 1.22), மற்றும் மலாக்கா (1.19).