சித்தியை கொலை செய்து விட்டு போலீசாரிடம் சரணடைந்த ஆடவர் – குவா முசாங்கில் சம்பவம்

குவா முசாங், ஜெரெக் அருகே கம்போங் பத்து மச்சாங்கில்  தனது வளர்ப்பு மகனால் கழுத்தில் அறுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மாது கொல்லப்பட்டார். குவா முசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர்  சிக் சூன் ஃபூ கூறுகையில்  39 வயதான சந்தேக நபர் பெர்டாம் காவல் நிலையத்தில் நேற்று மாலை 4.45 மணிக்கு வந்த பிறகு, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது. 54 வயதான சித்தியை கத்தியால் குத்தி கொன்றதாக அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மாலை 4 மணியளவில் நடந்ததாக நம்பப்படுவதாகவும், சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், அவர் மனநலப் பிரச்சினையையும் அனுபவித்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும்  சிக் கூறினார்.

சம்பவத்தின் போது சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வீட்டில் இருந்தனர் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய  சோதனையில்  கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட  ஆயுதத்தை கண்டெடுத்தனர்.   பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குவா முசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here