நாட்டில் இதுவரை 950 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 19 க்கு இடையில் 135 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர் மலேசியாவில் Omicron தொற்றுகளின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது.

135 புதிய தொற்றுகளில் 77 பேர் சரவாக், ஜோகூர் (15), மலாக்கா மற்றும் சிலாங்கூரில் தலா பத்து, கோலாலம்பூர் (ஒன்பது), நெகிரி செம்பிலான் (ஏழு), பேராக் (மூன்று)  கெடா (இரண்டு) மற்றும் பகாங் மற்றும் கிளந்தான்(1) என சுகாதார தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

950 ஓமிக்ரான் தொற்றுகளில் 919 ஆங்காங்கே ஏற்பட்ட தொற்றுகள் மற்றும் 31 நோய்த்தொற்றுகள் கிளஸ்டர்களுடன் (கொத்துகள்) இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here