கோவிட் தொற்றினால் நேற்று 1,804 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், 1,183 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 இல் உள்ளன, 621 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 இல் உள்ளன.
சிலாங்கூர் 251 புதிய சேர்க்கைகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சபா (239) மற்றும் ஜோகூர் (237) உள்ளன. நேற்று 20,399 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு அறிக்கையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) அவற்றின் மொத்த கொள்ளளவான 838 படுக்கைகளில் 36% இல் இருப்பதாகக் கூறினார்.
நான்கு மாநிலங்களில் உள்ள ICU படுக்கைகள் 50% திறனைத் தாண்டியுள்ளன. அதாவது கிளந்தான் (83%), கோலாலம்பூர் (65%) மற்றும் ஜோகூர் (65%).
191 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 36% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு பெரும்பாலான மாநிலங்களில் 50% திறனைத் தாண்டியுள்ளது.
அவை கிளந்தான் (101%), சிலாங்கூர் (97%), பேராக் (90%), கோலாலம்பூர் (87%), பெர்லிஸ் (81%), புத்ராஜெயா (77%), ஜோகூர் (75%), பகாங் (71%) , சபா (71%), பினாங்கு (52%), தெரெங்கானு (52%) மற்றும் சரவாக் (52%).
பொது மருத்துவமனைகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை (கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகள்), ஆபத்தான படுக்கைகள் 72% ஆகவும், 60% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன.
நேற்று 14 கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன. மலேசியாவின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought அல்லது R0) 1.13 ஆக இருந்தது.