கோத்தா பாரு, மார்ச் 2 :
கிளாந்தானில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,678 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,063 ஆக அதிகரித்துள்ளது.
இங்கு 2,976 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் நான்கு மாவட்டங்களில் உள்ள 29 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் கோலக்கிராயிலுள்ள தங்கள் வீடுகள் வெள்ளத்தால் மீட்கப்பட்ட பின்னர், 31 பேர் தங்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒரு நிவாரண மையம் நேற்று பிற்பகல் மூடப்பட்டது.
சமூக நலத்துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலின் அடிப்படையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,550 பேர் அங்குள்ள 21 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தானா மேராவில் மொத்தம் 172 பேரும், தும்பாட்டில் 298 பேரும், பாசீர் பூத்தேயில் 43 பேரும் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், Kelantan eBanjir போர்டலின் அடிப்படையில், அங்குள்ள ரந்தாவ் பாஞ்சாங் (10.53 மீட்டர்) மற்றும் தும்பாட்டிலுள்ள கோல ஜம்பு (3.82 மீட்டர்) ஆகிய இரண்டு ஆறுகளில் நீர்மட்டம் இன்னும் அபாய அளவை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.