சிபு, மார்ச் 2 :
இங்குள்ள கம்போங் பஹாகியா ஜெயாவில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்தது.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்தின் முதற்கட்டத் தகவல்கள் அடிப்படையில், பலியானவர்கள் சிமா அப்துல்லா, 18, ரஷிதா சூட், 81, மற்றும் இன்னும் ஒருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறியது.
இதற்கிடையில், சிபு, பிராந்தியம் 4 தீயணைப்புத் தலைவர் ஜங்கன் முல்லிங் கூறுகையில், இரவு 8.12 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்ததாகவும் தீயில் பலியான 3 வரைத் தவிர மேலும் நான்கு பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
இங்குள்ள இரண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 19 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரவு 9.00 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றார்.
JBPM தீ ஏற்பட்டதற்கான காரணத்தை இன்னும் ஆராய்ந்து வருகிறது.