கார் சாலையிலிருந்து சறுக்கி பள்ளத்தில் விழுந்ததில், ஓட்டுநருக்கு தலையில் பலத்தகாயம் !

சிலிம் ரிவர், மார்ச் 13 :

இன்று இங்கு வடக்கு – தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் சாலையின் 377.4 ஆவது கிலோமீட்டரில், அவர் பயணித்த கார் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததில், 20 வயது ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த 37 வயதுடைய நபர் சிறு காயங்களுக்கு உள்ளானார்.

முஅல்லிம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் இதுபற்றிக் கூறுகையில், கோலாலம்பூரில் இருந்து ஈப்போ செல்லும் வழியில், பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.

“வாகனம் பள்ளத்தில் விழுவதற்கு முன்பு,கார் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறத்தில் உள்ள இரும்பு தடுப்பில் மோதியதாக நம்பப்படுகிறது.

“இந்த விபத்தில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் காரிலிருந்த பயணிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களால் அகற்றப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் போக்குவரத்து ஒரு கிலோமீட்டருக்கு தடைப்பட்டது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 43 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

இதற்கிடையில், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சிலிம் ரிவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்உறுப்பினர்கள் குழுவுக்கு தகவல் கிடைத்ததும், உடனடியாக அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

“பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக உறுப்பினர்கள் சாலைக் கரையில் இருந்து சுமார் இரண்டு மீட்டர் ஆழத்திற்கு சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர்.

“பாதிக்கப்பட்டவர் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்சில் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here