செராஸில் மாதுவிடம் 25,000 வெள்ளி நகைகளை கொள்ளையடித்த 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

செராஸ் பண்டார் துன் ரசாக்கில் சனிக்கிழமையன்று வயதான பெண்ணிடம்  25,000 வெள்ளி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாராங்குகளுடன் வந்த இருவர், வீட்டின் முன் 77 வயது மாதுவின் நகை மற்றும் வளையல்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடித்ததில் அவள் கைகளில் காயம் ஏற்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.15 மணிக்கு போலீசார் முதல் நபரை கைது செய்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இட்ஸாம் ஜாபார் தெரிவித்தார். 35 வயதுடைய சந்தேகநபருக்கு முன்னர் 18 குற்றப்பதிவுகள் இருந்தன.

சந்தேக நபர் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஏப்ரல் 1 ஆம் தேதி வரை ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது சந்தேக நபரை நேற்று கைது செய்ததாகவும் 5,300  வெள்ளி பணத்தை மீட்டதாகவும் இட்ஸாம் கூறினார்.

இரண்டாவது சந்தேக நபரும் 29 வயதுடைய உள்ளூர் நபருக்கு 18 முந்தைய பதிவுகள் இருந்ததாகவும் சந்தேகநபர் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here