கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி சீனாவில் வேகமாக பரவும் கொரோனா; ஒரே நாளில் 13,000 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், ஏப்ரல் 3:

உலகில் முதன் முதலாக கொரோனா கண்டறியப்பட்ட நாடு சீனா. கடந்த 2019- ஆம் ஆண்டு கொரோனா சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை ஒரு கை பார்த்தது. ஆனால், மிகச்சிறப்பாக கையாண்டு கொரொனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்தது. பூஜ்ஜிய கொரோனா கொள்கை என கடைபிடித்து ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் ஒட்டு மொத்த நகரத்தையும் ஊரடங்குக்குள் கொண்டு வந்து சீனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது.

இருப்பினும், கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா சீனாவின் 12 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பரவியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,146- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 1,455 பேருக்கு அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 11,691 அறிகுறிகள் இன்றி கொரோனா உறுதியாகியுள்ளது. புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பரவல் காரணமாக சீனாவின் நிதி நகரமான ஷாங்காய் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நகரில் வசிக்கும் 2.5 கோடி பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here