இந்தோனேசியாவுக்குள் கார் கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்தது; ஒருவர் கைது!

கூச்சிங், ஏப்ரல் 5 :

​​அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு விற்பனைக்காக காரை கடத்த முயன்ற உள்ளூர் நபர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி, மலேசியா-இந்தோனேசியா எல்லைப் பகுதியில் இராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டபோது, தோல்வியில் முடிந்தது.

மலேசிய காலாட்படை முதல் பிரிவின் தலைமையகம் நேற்று இரவு சுமார் 10.10 மணியளவில் ரிம்புனான் செம்பனைத் தோட்டப் பகுதியில், போஸ் கண்டாய் (மலேசியா – இந்தோனேசியா எல்லையில் இருந்து 50 மீட்டர்) என்ற இடத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

“வாகன ரோந்து நடத்திக்கொண்டிருந்த பிரிவின் உறுப்பினர்கள் குறித்த ரிம்புனான் ஆயில் பாம் தோட்டப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான புரோட்டான் எக்ஸோரா வாகனத்தை கண்டனர்.

“உள்ளூர் நபர் ஒருவர் ஓட்டும் வாகனத்திற்கு சரியான சாலை வரி இல்லை என்பது ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டது.

“வாகனம் கடத்தப்பட்டு இந்தோனேசியாவில் விற்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வாகனத்தின் மதிப்பு ரிங்கிட் 45,000 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

28 வயதுடைய நபரும் கைப்பற்றப்பட்ட வாகனமும், மேலதிக விசாரணைக்காக லுண்டு மாவட்ட போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், நேற்றிரவு 10.25 மணியளவில், அதே பகுதி வழியாக மூன்று சட்டவிரோத குடியேற்றவாசிகள் மாநிலத்திற்குள் நுழைய முயற்சித்ததையும் 1வது பிரிவின் உறுப்பினர்கள் முறியடித்தனர்.

38 முதல் 41 வயதுக்குட்பட்ட மூன்று பேரும் இந்தோனேசிய குடிமக்கள் என்றும் அவர்கள் சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் என்று ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here