மெர்சிங்: மெர்சிங் நீரில் உள்ள அனைத்து ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெர்சிங் மாவட்ட அதிகாரி முகமது ஷாகிப் அலி தெரிவித்தார்.
அனைத்து ரிசார்ட்,சுற்றுலா, தீவு-ஹாப் படகுகள் மற்றும் டைவிங் சென்டர் நடத்துனர்கள் மெர்சிங் மாவட்ட நீர்நிலைகளில் அனைத்து ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங்கையும் உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இங்குள்ள தஞ்சோங் லெமனில் இருந்து ஒன்பது கடல் மைல் தொலைவில் உள்ள புலாவ் டோகாங் சங்கோலில் டைவிங் செய்யும் போது நான்கு வெளிநாட்டு ஸ்கூபா டைவர்ஸ் காணாமல் போன சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.
இதுவரை, டைவிங் பயிற்றுவிப்பாளர் கிறிஸ்டின் க்ரோடெம் 35, ஒரு நார்வேஜியன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் உள்ள கோத்தா திங்கிக்கு அருகிலுள்ள தஞ்சோங் செடிலி கடற்பகுதியில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மெர்சிங்கில் புலாவ் சிபு, புலாவ் பெசார், புலாவ் திங்கி, புலாவ் அவுர் மற்றும் புலாவ் பெமாங்கில் ஆகிய ஐந்து முக்கிய தீவுகள் உள்ளன.