கோவிட் தொற்றினால் நேற்று 241 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 135 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 இல் உள்ளன.
106 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 இல் உள்ளன. சிலாங்கூர் 44 புதிய சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து பேராக் (34) மற்றும் கெடா (22) உள்ளன.
நேற்று 282 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒரு அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா,கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ஐசியுக்கள்) அவற்றின் மொத்த கொள்ளளவு 760 படுக்கைகளில் 17% ஆகும். எந்த ஒரு பொது மருத்துவமனையும் நேற்று 50% ஐசியூ படுக்கை அளவைத் தாண்டவில்லை.
மொத்தம் 76 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது, அவர்களின் அதிகபட்ச திறனில் 10% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொது மருத்துவமனைகளில் கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை, முக்கியமான படுக்கைகள் 59% திறனில் இருந்தன. அதே நேரத்தில் 54% ஐசியுக்கள் பயன்பாட்டில் உள்ளன. நேற்று ஆறு புதிய கிளஸ்டர்களும் பதிவாகியுள்ளன.கோவிட்-19 தொற்று விகிதம் (R0) 0.86 ஆக இருந்தது.