கோத்தா பாரு, ஏப்ரல் 26 :
மலேசியாவிலிருந்து அண்டை நாட்டிற்கு கடத்தப்பட்டதாக நம்பப்படும் RM15,300 மதிப்புள்ள 510 கிலோகிராம் கெத்தும் இலைகளை இன்று, தானா மேராவுக்கு அருகிலுள்ள கம்போங் நிபோங்கில் மலேசிய ஆயுதப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டது.
எல்லைப் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கையின்போது, காலை 7.30 மணியளவில் மலேசிய எட்டாவது காலாட்படை தலைமையகத்தின் (8 ஆவது படைப்பிரிவு) உறுப்பினர்கள் குழுவால் சோதனை நடத்தப்பட்டது.
கடத்தல் பாதை என நம்பப்படும் பகுதியில் ரோந்து சென்றபோது, சுங்கை கோலோக் கரையில் சந்தேகத்திற்கிடமான பல கருப்பு பிளாஸ்டிக் பொதிகளை செயல்பாட்டுக் குழு கண்டறிந்ததாக மலேசிய ஆயுதக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களை சோதனை செய்ததில், மொத்தம் 50 கருப்பு பிளாஸ்டிக் பைகளில் 510 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
“கெத்தும் இலைகள் கொண்ட பிளாஸ்டிக் பொட்டலங்கள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக நம்பப்படுகிறது, மேலும் தாய்லாந்து சந்தையில் இந்த இலைகளுக்கு அதிக தேவை மற்றும் கிராக்கி காரணமாக கிளாந்தான்-தாய்லாந்து எல்லையில் கெத்தும் இலைகள் கடத்தல் மிகவும் தீவிரமாக இருப்பதைக் கண்டறிய முடிவதாகவும்,” அவர் கூறினார்.
“பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேல் நடவடிக்கைக்காக தானாஹ் மேரா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.