பயிற்சி ஆசிரியரிடம் கண்ணியத்தை மீறியதாக 27 வயதான விரைவுப் பேருந்து ஓட்டுநரை, மலாக்கா சென்ட்ரல் டெர்மினலில் போலீசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (மே 8) காலை 10.30 மணியளவில் கிளந்தானுக்கு சுற்றுப்பயணமாக இருந்து மலாக்கா சென்ட்ரல் வந்தவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா சிஐடி தலைவர் லிம் மெங் சீ கூறினார்.
அதே நாள் அதிகாலை 4 மணியளவில் தெரெங்கானுவில் உள்ள அஜில் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, டிரைவர் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 21 வயதான பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
கோத்தாபாருவில் இருந்து திரும்பும் பயணத்தின் போது தான் தூங்கி கொண்டிருந்த போது டிரைவர் தனது இரு தொடைகளையும் தடவியதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் இங்குள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்று வருகிறார்.
ஏசிபி லிம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் மலாக்கா தெங்கா போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் புகாரை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்ததால் சந்தேக நபர் தெராங்கானு போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் இங்குள்ள தனது நண்பர்களுக்கும் இந்த சம்பவத்தை தெரிவித்ததாகவும், அவர்கள் அனைவரும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உதவியதாகவும் தெரிய வந்ததுள்ளது.