ஈப்போ: தித்திவாங்சா மலைத்தொடரின் உச்சியில் செவ்வாய்க்கிழமை ஏறும் போது, மூத்த குடிமகன் ஒருவர் மிகுந்த சோர்வு காரணமாக இறந்ததாக நம்பப்படுகிறது.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறுகையில், கோலாலம்பூரைச் சேர்ந்த 66 வயது நபர், நிரந்தர வனப் பகுதிக்குள் நுழைய அனுமதி பெற்ற 13 மலை ஏறுபவர்களுடன் இருந்தார்.
சம்பவம் நடந்த இடம் உலு கிந்தா நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள குனுங் கோர்புவின் அடிவாரத்தில் இருந்து சுமார் எட்டு மணி நேர மலையேற்றத்தில் உள்ளது என்றார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் (ஜேபிபிஎம்) அவரது குழுவானது சிகரத்தில் இருந்து அவரின் உடலை மீட்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தின் போது, 11 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்கிய மலையேறும் குழுவினர் வனப்பகுதிக்குள் நுழைந்தனர்.
நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளை மனதில் கொண்டு, ஜேபிபிஎம் ஹெலிகாப்டரின் உதவியுடன் இன்று (உடலை மீட்பதற்கான) நடவடிக்கை தொடரும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.