செரியான், மே 26 :
இங்குள்ள செமுஜா (Semuja) குடிநுழைவு துறை தடுப்பு முகாமில் வெளிநாட்டுக் கைதி ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாலை 3.55 மணிக்கு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று செரியான் மாவட்ட காவல்துறை தலைமை துணை கண்காணிப்பாளர் அஸ்வாண்டி அனிஸ் கூறினார்.
“போலீசார் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
29 வயதான அந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செரியான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அஸ்வாண்டி கூறினார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.