சண்டையில் ஈடுபட்ட 17 பேர் கைது

சபா, சண்டாகானில் உள்ள பண்டார் உத்தமா பத்து 6 இல் உள்ள ஒரு கேளிக்கை விற்பனை நிலையத்திற்கு முன்னால் சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, 19 முதல் 40 வயதுடைய ஆண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

இரவு 11.30 மணியளவில் இந்த சண்டை நடந்ததாகவும், சந்தேகத்திற்குரிய 17 நபர்களும் விசாரணையில் உதவுவதற்காக தடுப்பு காவல் செய்யப்பட்டிருப்பதாக சண்டகன் மாவட்ட துணை போலீஸ் தலைவர் முகமட் ஹமிசி ஹலீம் தெரிவித்தார். சண்டைக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

கலவரத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 147ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here