புத்ராஜெயா, ஜூன் 14 :
தற்போதைய அரசாங்கம் நிலையானது, எனவே 15 ஆவது பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு இப்போது முன்னுரிமை அளிக்க தேவையில்லை என்று பாஸ் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர், பொருளாதாரம் மற்றும் சுகாதார பின்னணியில் நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு இன்னும் அரசாங்கத்திற்கு உள்ளது என்று எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சருமான அவர் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை மீண்டும் கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை, பொதுத் தேர்தலுக்கு இப்போது முன்னுரிமை அளிக்க தேவையில்லை, ஏனெனில் எங்களிடம் ஒரு நிலையான அரசாங்கம் உள்ளது, இது எதிர்க்கட்சிகள் உட்பட பல கட்சிகளின் ஆதரவைக் கொண்டுள்ளது.
எனவே “அடுத்த பொதுத் தேர்தலை அவசரமாக நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. இது தோற்க பயப்படுவதற்கான பிரச்சினை அல்ல, நிச்சயமாக ஒரு போட்டி இருக்கும், இதில் தேர்வு செய்வது மக்களைப் பொறுத்தது ,” என்று அவர் இன்று இங்கு நடந்த ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.
கூட்டாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில், அதாவது அமைச்சரவையின் கூட்டு ஒப்பந்தம் மற்றும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மேன்மைதங்கிய பேரரசரின் ஆலோசனையின் அடிப்படையில் 15 ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகியுடின் மேலும் கூறினார்.