அலோர் ஸ்டார்: ஜாலான் சுங்கைப்பட்டாணி- பாலிங் அருகே உள்ள சையத் ஓமர் பாலத்தில் அவர்கள் பயணித்த கார் சனிக்கிழமை (ஜூன் 25) ஆற்றில் விழுந்ததில் மூழ்கிய மூன்று குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மஷிதோ இப்ராஹிம் 37, மற்றும் அவரது இரு மகன்கள் முகமது ஜியாத் ஜிக்ரி ஷாருதின் 7, மற்றும் முகமது ஜியாத் ஹாசிக் 5 என அடையாளம் காணப்பட்டதாக பாலிங் ஓசிபிடி துணைத் தலைவர் ஷம்சுதீன் மாமத் தெரிவித்தார்.
விபத்து மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற கார் கோல கெட்டிலில் இருந்து சுங்கைப்பட்டாணியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனர் திடீரென பாலத்தில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி சுங்கை மூடா ஆற்றில் விழுந்தது என்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
பலியானவர்கள் அனைவரும் ஆற்றின் அடியில் காரில் சிக்கிய நிலையில் காணப்பட்டதாகவும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஷம்சுதீன் கூறினார்.
விசாரணைக்கு உதவும் சாட்சிகளை போலீசார் இப்போது தேடிவருகின்றனர் என்று துணைத் தலைவர் ஷம்சுதீன் கூறினார். மேலதிக விசாரணைக்காக காரின் இடிபாடுகள் பாலிங் போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.