கார் தடுப்பு கம்பத்தில் மோதி வாய்க்காலில் விழுந்ததில், இருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஜோகூர் பாரு, ஜூலை 4 :

ஜாலான் பெர்சியாரான் உத்தாமா போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில், தாமான் முத்தியாரா ரினியில், அவர்கள் சென்ற கார் சறுக்கி வாய்க்காலில் விழுந்ததில், இருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

காலை 11.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஜாலான் போந்தியான் லாமா, தாமான் தேசா ஸ்கூடாய் திசையில் இருந்து ஃபர்ஹான் காசினின் (21) என்பவர் ஓட்டிச் சென்ற புரோத்தோன் சாகா கார், போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஓட்டுநர் வாகனத்தை கட்டுப்படுத்த தவறியதால், வாகனம் சாலையின் குறுக்கே வேகமாக சென்று, சாலை தடுப்பு கம்பத்தில் மோதி, ஒரு மீட்டர் ஆழமுள்ள வாய்க்காலில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்குச் சென்ற மக்கள் விபத்தில் சிக்கிய இருவரையும் விரைந்து மீட்டனர்.

இவ்விபத்தில் கார் ஓட்டுநரான ஃபர்ஹானுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது, அவரது தந்தை காசினின் சுங்கிப், 68, ற்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

மேலும் ஸ்கூடாய் மற்றும் தாமான் யூனிவேர்சிட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆகியோர் விபத்தில் காயமடைந்தவரை மீட்க உதவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here