நாட்டில் 1,416,110 சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜூலை 11:

சுகாதார அமைச்சகத்தின் CovidNow இணையதளத்தின் இன்று நண்பகல் 1.46 மணி நிலவரப்படி, நாட்டின் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மொத்தம் 1,416,110 சிறுவர்கள் அல்லது 39.9 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 1,766,684 சிறுவர்கள் அல்லது 49.8 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) மூலம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதற்கிடையில், 12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு, மொத்தம் 2,894,593 நபர்கள் அல்லது 93.0 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,974,984 நபர்கள் அல்லது 95.6 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

மேலும் நாட்டிலுள்ள 18 முதல் 60 வயதுடைய பெரியவர்கள் மொத்தம் 16,109,656 தனி நபர்கள் அல்லது 68.5 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவையும் 163,405 தனி நபர்கள் அல்லது 0.7 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் இரண்டாவது அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 23,030,686 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 23,308,634 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

அத்தோடு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மொத்தம் 2,572,611தனி நபர்கள் அல்லது 68.5 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவையும் 84,238 தனி நபர்கள் அல்லது 2.3 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் இரண்டாவது அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 3,386,437 பேர் அல்லது 92.8 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 3,406,640 பேர் அல்லது 93.4 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

நேற்று 5,277 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டது. அதில் முதல் டோஸாக 145 தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக 1,677 தடுப்பூசிகளும், 299 பூஸ்டர் டோஸ்களும் செலுத்தப்பட்டன. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 71,490,202 ஆகக் கொண்டுவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here