மற்றொரு பச்சை ஆமை சடலமாக கரை ஒதுங்கியது

கோல தெரங்கானு, டுங்குன் அருகே உள்ள தெலுக் பிடாரா கடற்கரையில் பச்சை ஆமையின் (penyu agar) மற்றொரு சடலம் இன்று கரை ஒதுங்கியது.

இது வேண்டுமென்றே கொல்லப்பட்டதாக  நம்பப்படுகிறது. இங்குள்ள தஞ்சோங் ஜாரா ரிசார்ட்டில் உள்ள லாங் தெங்கா ஆமை கண்காணிப்பு பாதுகாப்பு திட்ட மேலாளர் அபிதா ஜாபா கூறினார்.

காலை 8 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தனக்கு அழைப்பு வந்து கடற்கரைக்கு விரைந்தேன். அங்கு இறந்த ஆமை செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக அபிதா கூறினார்.

ஆமைகள் தற்செயலாக வலையில் சிக்குவதைத் தடுக்க விரும்பும் மீனவர்களின் செயலாக இந்தப் பொறுப்பற்ற செயலாக இருக்கலாம். ஆனால் கடலின் அடிப்பகுதியில் மூழ்கியபோது ஆமை உயிருடன் இருந்ததா அல்லது இறந்துவிட்டதா என்பதை இப்போது கண்டறிவது கடினம்  என்று அவர் இன்று பெர்னாமாவ தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த வியாழன் அன்று, ஒரு பெண் பச்சை ஆமை மாராங் அருகே உள்ள புலாவ் கபாஸ் நீரில் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்தது. மீனவர்கள் தங்கள் வலைகளை காப்பாற்ற எளிதான வழி என்று நம்பப்படுகிறது.

இன்று காலை கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்ததாக நம்பப்படுகிறது என்று அபிதா கூறினார். அதன் வயது 15 முதல் 20 வயது வரை இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். ஆனால் அதன் வால் பகுதி மோசமாக அழுகியிருப்பதால் அதன் பாலினத்தை அடையாளம் காண முடியவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here