பெண்ணை தாக்கி, மளிகைக் கடையில் கொள்ளையடித்துவிட்டு, அதற்கு தீ வைத்த கொள்ளையன் கைது..!

ரவூப், ஜூலை 25 :

இங்குள்ள ஃபெல்டா டெர்சாங் 1இல் உள்ள பல்நோக்கு அங்காடியிலிருந்த இந்தோனேசியப் பெண்ணை தாக்கிவிட்டு, கடையில் கொள்ளையடித்ததுடன் மளிகைக் கடைக்கு தீ வைத்த நபர், சுங்கை கோயான் பண்ணை பகுதியான கோலா லிப்பிஸில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கொள்ளையனால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் தலை மற்றும் முகத்தில் காயமடைந்தார்.

ரவூப் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் காமா அசுரல் முஹமட் கூறுகையில், 50 வயதுடைய சந்தேகநபரை இரவு 7.15 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்றுக்கு கிடைத்த தகவலின் உதவியுடன் அவரை கைது செய்ய முடிந்தது என்றார்.

இதன்படி, முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவரின் தலை மற்றும் முகத்தில் காயங்களை ஏற்படுத்தி, மளிகைக் கடைக்கு தீ வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேக நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார், அப்போது அவருக்கும் காவல்துறையினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேக நபரிடம் இருந்து RM1,420 ரொக்கப்பணம், மணிகள் கொண்ட தங்க வளையல் மற்றும் இரண்டு தங்க வளையல்கள் அடங்கிய கருப்பு பையையும் போலீசார் கைப்பற்றினர்.

போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான 10 கடந்தகால பதிவுகளும், நான்கு குற்றவியல் குற்றங்களின் முந்தைய பதிவுகளும் இருப்பதாக காமா அசுரல் கூறினார்.

முதற்கட்ட விசாரணையின் முடிவுகளில், சந்தேக நபர் தனியாக செயல்பட்டதாகவும், பெண்ணிற்கு காயங்களை ஏற்படுத்தி மளிகை கடைக்கு தீ வைத்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here