இந்தியர்களுக்கான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரை தாக்கியதாகக் கூறப்படும் மஇகாவின் உறுப்பினர்களில் ஒருவரை இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை கருத்தில் கொண்டு மஇகா நடவடிக்கை எடுத்திருப்பதாக மஇகாவின் பொதுச்செயலாளர் ராஜசேகரன் தியாகராஜன் கூறியதாக கூறப்படுகிறது.
பெர்சத்து ஹராப்பான் இந்தியா மலேசியா தலைவர் எம்.மணிமாறனை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
ஒரு மாதத்திற்குள் மணிமாறன் தாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஜூலை 27 அன்று, காஜாங்கில் ஒரு ஆடவர் அவரது கழுத்தை பிளேடால் அறுத்தார். மேலும் அவருக்கு காயத்திற்கு 16 தையல்கள் போடப்பட்டன.