ஜெல்லிமீன் குத்தியதில் பிரெஞ்சு சிறுவன் மரணம் – பாங்கோர் தீவில் சம்பவம்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 18 :

பாங்கோர் தீவில் உள்ள தெலுக் நிபா கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த 5 வயது பிரான்ஸ் நாட்டுச் சிறுவன் ஒருவன் ஜெல்லிமீன்கள் குத்தி உயிரிழந்தான்.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவரின் வயிறு, இடது கை மற்றும் இடது காலில் மீன் குத்தியதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் பங்கோர் சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here