கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 :
இங்குள்ள சௌஜனா டாமன்சாரா டாமாயில் உள்ள ஒரு வீட்டில், 19 வயது பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக, மூன்று இளைஞர்களை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) காலை மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்த மூன்று சந்தேக நபர்களையும் போலீசார் கைது செய்ததாக மாவட்ட துணை காவல்துறைத் தலைவர், கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.
“ஆரம்பகட்ட விசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவர் இரவு உணவிற்கு அப்பெண்ணை அழைத்ததால், அவரின் வீட்டில் வைத்து மூவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது, ,” என்று அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் அனைவரும் 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என்று அவர் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.