பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி, சர்ச்சைக்குரிய கடல்வழி போர்க்கப்பல் (எல்சிஎஸ்) ஊழலில் மற்றொரு முக்கியப் பங்காற்றியவர் என்று பிரதமர் துறை (சிறப்புப் பணிகள்) அமைச்சர் டத்தோ அப்துல் லத்தீஃப் அஹ்மட்டைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை முகநூல் பதிவில், அப்துல் லத்தீப்பின் இரண்டாவது மனைவி ஜைனப் முகமது சலே இந்த சர்ச்சையில் ஈடுபட்டதாக ரஃபிஸி கூறினார்.
முன்னாள் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுப்படி, மால்டாவில் பதிவுசெய்யப்பட்ட அலிஸ் மரைன் லிமிடெட் மற்றும் லாபுவானில் பதிவுசெய்யப்பட்ட அலிஸ் மரைன் லாபுவான் ஆகிய இரண்டு கடல்சார்ந்த நிறுவனங்கள் எல்.சி.எஸ் போர்க்கப்பல் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளன.