2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர், அக்., 28ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட், முன் கூட்டியே நடத்தப்படும். திட்டமிடப்பட்டதை விட மூன்று வாரங்களுக்கு முன்னதாக – அக்டோபர் 7 ஆம் தேதி மக்களவையில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) கூடிய அமைச்சரவையில், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த முடிவை அறிவித்தார். விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான அறிகுறியாக இந்த முடிவு கருதப்படுகிறது.

இந்தச் செய்திக்கு பதிலளித்த தேசிய முன்னணி அதிகாரிகள், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று கூறியுள்ளனர். மக்களவை தனது அடுத்த கூட்டத்தை அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய பிறகு நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

அமைச்சரவை உத்தரவைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக திவான் ராக்யாட் சபாநாயகர் டான்ஸ்ரீ அசார் அஜிசான் ஹாருனுக்குத் தெரிவிக்க வேண்டும், புதிய தேதியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க குறைந்தபட்சம் 28 நாட்கள் தேவைப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here