பாலிங்கில் செயலில் இருந்த கடைசி வெள்ள நிவாரண மையம், இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது

பாலிங், செப்டம்பர் 9 :

இங்குள்ள டேவான் தேர்புகா கம்போங் பாடாங் எம்பாங்கில் செயல்பட்டு வந்த கடைசி வெள்ள நிவாரண மையம், அங்கு தங்கியிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீடு திரும்பிய பின்னர், இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது.

பாலிங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை (APM) அதிகாரி லெப்டினன்ட் (PA) முகமட் ஃபைசோல் அப்துல் அஜிஸ் கூறுகையில், கடந்த செவ்வாய்கிழமை வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த 94 பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க இந்த நிவாரண மையம் திறக்கப்பட்டது என்றார்.

இன்று காலை 10 மணிக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவரான பாலிங் மாவட்ட அதிகாரியால் இந்த நிவாரண மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் “வெள்ளம் காரணமாக சேதமடைந்த பெய்லி பாலம், அனைத்து வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் இன்னும் மூடப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here