தும்பாட்டில் பெண் கடத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் போலீஸ் விசாரணை ஆரம்பம்

கோத்தா பாரு, செப்டம்பர் 14 :

தும்பாட்டின் கம்போங் சிமாட் ஜாலில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 13) முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 36 வயது பெண் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

தும்பாட் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அம்ரான் டோலா கூறுகையில், பாதிக்கப்பட்டவரை மாலை 5.10 மணியளவில் பழுப்பு நிற காரில் நான்கு பேர் கடத்திச் சென்றதாக நம்பப்படுகிறது.

“சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கிகள் போன்ற ஆயுதம் ஏந்தியதாகவும், அந்தக் கார் வாகாப் பாரு, தும்பாட் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

“சம்பவம் குறித்த புகாரைப் பெற்றுக்கொண்டதை தும்பாட் போலீசார் உறுதிப்படுத்தினர், மேலும் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது” என்று, அவர் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக கிளாந்தான் காவல்துறை தலைமையகத்திற்கு 09-7450999 அல்லது தும்பாட் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறைக்கு 09-7257222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி அம்ரான் கேட்டுக் கொண்டார்.

“போலீஸ் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், எந்தவித ஊகங்களையும் வெளியிடாமல் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை நான் கோருகிறேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here