சிரம்பானில் நேற்றிரவு ஜாலான் சிரம்பான் – கோல பிலாவின் 17ஆவது கி.மீட்டரின் குறுக்கே சென்ற தபீர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 33 வயது நபர் இறந்தார்.
இரவு 11.15 மணியளவில் பாதிக்கப்பட்டவர் சிரம்பானில் இருந்து கோல பிலாவை நோக்கிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கோல பிலா காவல்துறைத் தலைவர் அம்ரன் முகமட் கானி தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த நபர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் தபீரும் உயிரிழந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.