பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடஅளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்து அறிவித்தார். இஸ்மாயில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லா ஷாவைச் சந்தித்ததாகக் கூறினார்.
அக்டோபர் 10 ஞாயிற்றுக்கிழமை முதல் நாடாளுமன்றத்தை கலைக்க மன்னர் பரிந்துரைத்துள்ளார்” என்று இஸ்மாயில் ஒரு சிறப்பு அறிவிப்பில் தெரிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் கூடி வாக்கெடுப்பு தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.