லங்காவி, அக்டோபர் 18 :
கெடாவில் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை , நேற்று 67 ஆக இருந்த நிலையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி 49 பேராக குறைந்துள்ளது என்று, லங்காவி மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி, கேப்டன் (PA) அஹ்மத் ஷாஃபிக்ரி தாருஸ் கூறினார்.
மாவட்டத்தில் இதுவரை நான்கு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
“பாடாங் மட்சிரத் துணை மாவட்டத்தில் உள்ள கம்போங் அத்தாஸ் மற்றும் லிம்பாங் புத்ரா மற்றும் குவா துணை மாவட்டத்தின் புலுஹ் பென்யும்பிட் கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், நேற்று இரவு முதல் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.