பகாங் அரச குடும்பத்தை அவமதித்ததாக தெங்கு சுல்பூரிக்கு எதிராக பதினொரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காவல்துறையில் புகார்

குவாந்தான், அக்டோபர் 25 :

பகாங் அரச குடும்பத்தை அவமதித்ததாகக் கூறப்படும் DAP துணைப் பொதுச்செயலாளர், தெங்கு சுல்பூரி ஷா ராஜா பூஜிக்கு எதிராக பதினொரு அரசு சாரா நிறுவனங்கள், இன்று செவ்வாய்க்கிழமை (அக் 25) குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் புகாரளித்துள்ளன.

பகாங் ராயல்டி நல அமைப்பின் பொருளாளர், டத்தோ செத்தியா பெங்காவா தெங்கு டத்தோ அப்துல் மனன் தெங்கு தெமெங்குங் அஜிஸ் கூறுகையில், அரசியல்வாதி தனது அறிக்கையில் எல்லை மீறிச் செயல்பட்டதாகக் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலில் வரம்புகள் உண்டு என்பதை மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய அவருக்கு எதிராக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஒரு உரையில் யாங் டி-பெர்துவான் அகோங்கின் பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறப்படும் தெங்கு சுல்பூரி ஷாவின் செயலுக்கு அமைப்பு வருத்தம் தெரிவித்ததாகவும், வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலம் அவருக்கு அனுப்பப்பட்ட 1.53 நிமிட வீடியோ கிளிப்பில் தான் அதைப் பார்த்ததாகவும் தெங்கு அப்துல் மனன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here