பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 26 :
நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் காலம் சென்ற டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் மகன் நிக் ஓமர் பார்ட்டி கேடிலான் ராக்யாட் (PKR) கட்சியின் கீழ் பேராக்கில் போட்டியிடவுள்ளார்.
இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
நிக் ஒமர் முன்னாள் பாஸ் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் இரண்டாவது பிள்ளை எனபது குறிப்பிடத்தக்கது.