மூடா தலைவர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான் பொதுத் தேர்தலில் நிற்க வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்காக மூடாவின் உச்ச மன்றம் விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தி மலேசியன் இன்சைட் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தற்போதைய மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் தனது வாதத்தை முன்வைக்க உத்தரவிட்டதை அடுத்து இது வந்துள்ளது.
முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரத்தை கட்சிக்கு கொண்டு வந்து முடிவெடுக்க வேண்டும். கூடிய விரைவில் கூட்டம் நடத்தப்படும் என்றார்.
நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு பொதுத்தேர்தலில் மூட வாய்ப்புகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த சையத் சாதிக், அதை மக்களின் தீர்ப்பிற்கே விட்டுவிடுகிறேன் என்றார்.