புத்ராஜெயாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டி உடைந்ததில் 6 கார்கள் சேதம்

புத்ராஜெயா: தாமான் மாஸ், சிப்பாங்கில் உள்ள பெனாகா மாஸ் பிளாக் பி அபார்ட்மென்ட்டில் நேற்று தண்ணீர் தொட்டி உடைந்ததில் 6 கார்கள் பலத்த சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் (ஐபிடி), உதவி ஆணையர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டி இரவு 7.15 மணியளவில் 18.5 மீட்டர் உயரத்தில் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

அவர் கூறுகையில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், உடமைகள் மற்றும் வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 172 வீட்டு உரிமையாளர்களுக்கு உதவ சிலாங்கூர் ஆயர் நிறுவனத்திடமிருந்து சுத்தமான தண்ணீர் லோரி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

உடமை மற்றும் வாகன சேதத்தை எதிர்கொள்ளும் குடியிருப்பாளர்கள் காப்பீட்டு கோரிக்கைகளுக்கு புகாரளிக்க புத்ரா பெர்டானா காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here