கோத்தா பாருவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 15ஆவது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மாராங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசன் தெரிவித்தார்.
அவர் (அப்துல் ஹாடி) இம்முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற வதந்திகளை நான் கேட்கவில்லை. அவர் தனது இடத்தைப் பாதுகாப்பார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்று பந்தாய் கஹாயாவில் இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் சுற்றுலா அதிகாரமளித்தல் கருத்தரங்கில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
15ஆவது பொதுத் தேர்தலில் அப்துல் ஹாடி போட்டியிட மாட்டார் என்ற பேச்சுக்கு அவர் பதிலளித்தார். 14ஆவது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் கெஅடிலான் போட்டியாளர்களுக்கு எதிராக 53,749 வாக்குகள் பெரும்பான்மையுடன் அப்துல் ஹாடி மராங் தொகுதியில் வெற்றி பெற்றார்.