கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஜபிடின் தியா, மலாயாவின் (CJM) தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அசாஹர் முகமது இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தைத் தொடர்ந்து அவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுள்ளார்.
அனைத்து நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிமன்ற அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், அந்த பதவி நிரந்தரமாக நிரப்பப்படும் வரை ஜபிடின் அந்த அலுவலகத்தின் கடமைகளையும் செயல்பாடுகளையும் செய்வார். 1964 ஆம் ஆண்டு நீதிமன்ற நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 9(3) இன் படி தெங்கு மைமுன் நியமனம் செய்யப்பட்டார். அதில் ஒரு கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒரு காலியிடத்தின் போது CJM இன் கடமைகளைச் செய்யலாம் என்று கூறுகிறது.
2019 ஆம் ஆண்டு CJM ஆக நியமிக்கப்பட்ட அசாஹர், அக்டோபர் 27 அன்று ஓய்வு பெற்றார். எப்எம்டி தொடர்பு கொண்டபோது, மலேசிய பார் தலைவர் கரேன் சியா, இன்று தலைமை நீதிபதியின் கடிதத்தின் நகல் தனக்கு கிடைத்ததாகக் கூறி, நியமனத்தை உறுதிப்படுத்தினார்.
ஜபிடினின் நியமனம் திங்கள்கிழமை (நவம்பர் 7) முதல் அமலுக்கு வருவதாக அந்தக் கடிதம் கூறுகிறது என்று அவர் கூறினார். 65 வயதான ஜாபிடின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி வகித்தார். நவம்பர் 26, 2018 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு, ஜூலை 28, 2006 அன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.