டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான கெராக்கான் தனா ஏர் (ஜிடிஏ) கூட்டணி, அதன் பொதுத் தேர்தல் (ஜிஇ15) அறிக்கையை அடுத்த சில நாட்களில் வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.
பாரிசான் நேஷனல், பெரிகாத்தான் நேஷனல் மற்றும் கபுங்கன் பார்ட்டி சரவாக் ஆகியவை ஞாயிற்றுக்கிழமையும், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) நவம்பர் 2ஆம் தேதியும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.
இந்நிலையில் தனது கூட்டணி “வெற்று வாக்குறுதிகளை வழங்காது” என்றும் தங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் நாடு மீண்டும் ஆசியப் புலியாக மாறும் என்றும் மகாதீர் கூறினார்.
15வது பொதுத் தேர்தலில் (GE15) கூட்டணி வெற்றி பெற்றால், சுங்கச்சாவடிகளை ஒழிப்பதாக PH இன் புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழியை சமீபத்தில் விமர்சித்த அவர் நெடுஞ்சாலைகளை சீரமைக்க நிதி எங்கிருந்து வரும் என கேள்வி எழுப்பினார்
பொது மக்கள் நவம்பர் 19 ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர், நவம்பர் 15 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிக்க திட்டமிடப்பட்டுள்ளது.