பி.ராமமூர்த்தி,மெந்தகாப், நவ.16–
தெமர்லோ மாவட்ட இந்தியர் ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கு.விஜேந்திரன் தலைமையில் இங்குள்ள தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டம் (புளூ பிரிண்ட்) வெளியீட்டு விழா காணவிருக்கின்றது.
இந்தியர்களின் பொருளாதாரம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, உயர்க்கல்வி, அடையாள ஆவணங்கள் போன்ற திட்டங்கள் இதில் இடம்பெறும். சிறப்பு பிரமுகராக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹாஜி சர்க்கார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.