குவாந்தான்: பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் முகமட் யூனுஸ் ரம்லி மரணமடைந்ததைத் தொடர்ந்து தியோமன் மாநிலத் தொகுதிக்கான தேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. பகாங் தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் டத்தோ ஜம்ரி ஹம்லியை தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதி செய்தார்.
இது தியோமானுக்கு மட்டுமே. ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பிற மாநிலத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் வழக்கம் போல் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார். இன்று சனிக்கிழமை (நவம்பர் 19) அதிகாலை 3.30 மணியளவில் முகமட் யூனுஸ் மாரடைப்பால் காலமானார்.