கோலாலம்பூர், நவம்பர் 20 :
இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் ஆறு மாநிலங்களில் 691 குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 2,530 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் (NADMA) இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்களான கிளாந்தான், பேராக், சிலாங்கூர், ஜோகூர், மலாக்கா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் உள்ள 15 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
“பேராக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநில அளவில் அதிகமாகவுள்ளது. அதாவது 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (886), கிளாந்தான் (401), ஜோகூர் (276), மலாக்கா (44) மற்றும் சரவாக் (3) என ஆறு மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள மொத்தம் 35 வெள்ள நிவாரண மையங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அது மேலும் கூறியது.