சுபாங் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான தொகுதிகள் (பலம்) தங்களிடம் இருப்பதாகக் கூறுகிறார். 15ஆவது பொதுத் தேர்தலின் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் PH 111 இடங்களுக்கு மேல் பெற்ற மிகப்பெரிய கட்சியாகும் என்று அவர் கூறினார்.
PH நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றவுடன் மாமன்னரிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார். இருப்பினும், அவர் தனது கூட்டாளர்களை வெளிப்படுத்த மறுத்துவிட்டார். மாமன்னரிடம் சமர்ப்பித்த பின்னரே அது தெரியவரும் என்று கூறினார்.